Lions Club Of Perambalur

75 ஆம் ஆண்டு சுதந்திரதின விழா கொண்டாட்டம்

பெரம்பலூர் RC பாத்திமா தொடக்க பள்ளியில் சுதந்திர தின விழா கலைநிகழ்ச்சிகளுடன் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
# RC பாத்திமா பள்ளி சுற்றுப்புற சுவர் சுத்தம் செய்ய பட்டு, வண்ணம் பூசி தரப்பட்டது.
# போட்டியில் வெற்றி பெற்ற 60 குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
# 500 மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தேசியக் கொடி ‌மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
 
நாள்: 15.08.2022 திங்கட்கிழமை
இடம்: RC பாத்திமா தொடக்க பள்ளி பெரம்பலூர்.
 
600
1800

ஆனந்தம் ஆண்டின் சுதந்திரதின அமுதப்பெருவிழா பசிப்பிணி போக்குவோம்

பெரம்பலூர் சாலையோர பாதசாரிகளுக்கு உணவு, குடிநீர் வழங்கப்பட்டது.

நாள்: 14.08.2022 ஞாயிற்றுக்கிழமை

50
9
 
9

கண்தானம் -1

பெரம்பலூர் அரிமா சங்க நிர்வாகிகள் நளபாகம் Lion V. முத்துவீரன் , Lion V. காசி அவர்களின் சின்னம்மா , ப. கமலம் அவர்கள் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அம்மையாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்..
அம்மையராது கண்கள் தானமாக பெறப்பட்டு திருச்சி AG கண் மருத்துவமனையில் நேரடியாக சென்று ஒப்படைக்கபட்டது.

ஆனந்தம் ஆண்டின் சுதந்திரதின அமுதப்பெருவிழா பசிப்பிணி போக்குவோம்

பெரம்பலூர் சாலையோர பாதசாரிகளுக்கு உணவு, குடிநீர் வழங்கப்பட்டது.

நாள்: 13.08.2022 சனிக்கிழமை

50
60
 
60
$25  USD

ஆனந்தம் ஆண்டின் சுதந்திரதின அமுதப்பெருவிழா எளியவர்க்கு ஈதல்

பெரம்பலூர் மாவட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பனங்கூரில் கல்வி பயிலும் பள்ளி சிறுவர் சிறுமிகள் 35 பேருக்கு தேசியகொடி, விளையாட்டு உபகரணங்கள், சாக்லேட் கிட் , பென்சில் கிட் மற்றும் மரச்செடிகள் வழங்கப்பட்டது.

நாள்: 12.08.2022 வெள்ளிக்கிழமை

50

12,000

சுதந்திரதின அமுதப்பெருவிழா எளியவர்க்கு ஈதல்

பெரம்பலூர் ஆலம்பாடி சாலையில் உள்ள குழந்தைகள் இல்லத்தில் தங்கி கல்வி பயிலும் பள்ளி சிறுமிகள் 35 பேருக்கு புத்தகப்பை மற்றும் சாக்லேட் கிட் வழங்கப்பட்டது.

நாள்: 10.08.2022 புதன்கிழமை

40 வது மாவட்ட அமைச்சரவை பணியேற்பு விழா

கரூரில் நடைபெற்ற 40 வது மாவட்ட அமைச்சரவை பணியேற்பு விழாவில் பெரம்பலூர் அரிமா சங்கம் சார்பாக கலந்து கொண்டு சிறப்பித்தோம்..இந்நிகழ்வில் 5 உறுப்பினர்களுக்கு மேல் சேர்த்த சங்கத்திற்கான விருதை பெரம்பலூர் அரிமா சங்கம் பெற்றது..

டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள்

விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்காது…
கனவுகளின் நாயகன் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் அவர்களின் கனவு நாயகர்களாகிய மாணவ செல்வங்களை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொருவருக்கும் புத்தகங்கள், விதை பை பெரம்பலூர் அரிமா சங்கம் சார்பாக பரிசாக வழங்கப்பட்டது.
இடம் : மரகதம் மெட்ரிக்குலேஷன் மேல்நிலை பள்ளி,பெரம்பலூர்.